நிதி நிறுவனத்தில் 3 கிலோ தங்கம் திருட்டு – 2 ஊழியர்கள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கலவானை பிரதேசத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்துத் தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இருவரும் கலவானை பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 33 வயதுடையவர்களாவர்.

குறித்த தனியார் நிதி நிறுவனத்திலிருந்து 68,978,357 ரூபா பெறுமதியான தங்க மாலைகள், மோதிரங்கள் , வளையல்கள் , காதணிகள் உள்ளிட்ட 03 கிலோ 770 கிராம் நிறையுடைய தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக

அந்த நிறுவனத்தின் பதில் முகாமையாளர் கலவானை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply