கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தியுடன் மோதிய பேருந்து – 13 பேர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கம்பஹா,பெலும்மஹர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பெலும்மஹர சந்தியில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

இதன்போது திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று (22) இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றிருந்து.

விபத்தில் 13 பேர் காயமடைந்து கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 10 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துடன் பஸ்ஸின் பின்னால் மற்றும் கொள்கலனுக்கு முன்னும் பயணித்த 07 வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.