12 வயது சிறுமி பலாத்காரம் – 14 வயது சிறுவன் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பாடசாலை ஒன்றில் தரம் 09 இல் கல்வி கற்கும் மாணவன் அதே பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 07 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரை வன்கொடுமை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் மஹியங்கனை ஒருபெந்திவெவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அயலவர் எனவும் அவர் வீட்டில் தனியாக இருந்த போது அவரை பலாத்காரம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு அச் சிறுமி பலமுறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மஹியங்கனை பொலிஸாரால் 14 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting