யாழ். புன்னாலைக்கட்டுவனில் வீடு புகுந்து வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீதும், வீட்டிலிருந்தோர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது.

மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ரதீஸ்தரன் (வயது 41) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கில் அமைந்துள்ள குறித்த வீட்டினுள்

நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு உட்புகுந்த வன்முறைக் கும்பல் வீட்டின் மீது பெற்றோல் குண்டை வீசி தாக்குதலை மேற்கொண்டதுடன் , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் ,

வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி அட்டகாசம் புரிந்துள்ளது. வீட்டில் இருந்த பெண்களையும் வாளினை காட்டி அச்சறுத்தி , அவர்களின் பெறுமதி வாய்ந்த கையடக்க தொலைபேசிகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply