முல்லைத்தீவவில் 17 வயது இளைஞன் பரிதாப மரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் தமிழ்வாணன் என்ற 17 வயது இளைஞன் விபத்து காரணமாக படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

3 நாட்களுக்கு முன்பு பட்டா வாகனத்தில் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இருந்து உடையார்கட்டு சென்று திரும்பும் போது மாட்டுடன் மோதி பயணித்த 4 பேர் தூக்கி வீசப்பட்ட நிலையில் தலையில் காயமடைந்த தமிழ்வாணன் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்,

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நேற்றய தினம் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply