பல பதக்கங்களை வென்ற கௌசல்யா மதுஷானி தற்கொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பெண்களுக்கான 400 மீற்றர் தடை ஓட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை வென்ற கௌசல்யா மதுஷானி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குளியாப்பிட்டிய, தும்மலசூரிய பகுதி​யை சேர்ந்த 25 வயதுடைய இவர், சர்வதேச தடகளப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

அவர் தனது வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் 2014 ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 400மீ தடகள ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம், 2016 தெற்காசிய விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம், தேசிய 400மீ தடகள ஓட்டம் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் மற்றும் 13வது தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம், 13வது தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வெற்றி பெற்றுள்ளார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply