டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 60 பேர் உயிரிழப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 40வது நாளை எட்டி உள்ளது. குளிர் மற்றும் மழையைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டக் களங்களில் முகாமிட்டுள்ளதால், வயதான விவசாயிகளின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்களங்களில் விவசாயிகள் உயிரிழப்பும் தொடர்கிறது. இதுவரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயித் கூறுகையில், ‘டெல்லி போராட்டத்தில் இதுவரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி உயிரிழக்கிறார், இதற்கு பதில் சொல்லவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு’ என்றார்.

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதைத் தவிர வேறு எந்த தீர்வையும் விவசாயிகள் பரிசீலனை செய்ய மாட்டார்கள் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 6 கட்ட பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இல்லாத நிலையில், இன்று 7ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இன்றைய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply