கொத்து ரொட்டி – பரோட்டா விலைகள் அதிகரிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாட்டில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை தொடர்ந்து உணவகங்களில் கொத்து மற்றும் ரொட்டி உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கும். என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அசேல சம்பத் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கும். ஆனாலும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டால்,

சிற்றுணவக தொழிற்துறை வீழ்ச்சியடையும். இது பாரிய பிரச்சினையாகும். எனவே, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, தங்களது தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில்

தாங்கள் விரும்பியவாறு விலை அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு சிற்றுண்டி உரிமையாளர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், தாங்கள் விலை அதிகரிப்பை மேற்கொண்டால், உண்மையில் இந்த தொழிற்துறை வீழ்ச்சியடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 4,860 ரூபாவாகும்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply