குடும்பத் தகராறில் சிறுவன் பலி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அம்பாறை – அட்டாளைச்சேனை பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட கைகலப்பில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது சகோதரியின் கணவருக்கும் குறித்த சிறுவனுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குலில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுவனின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply