இ.போ.ச பேருந்து மோதி விபத்து – யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் குறித்த சம்பவம் இன்று நண்பகல் கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து கிளிநொச்சி இயக்கச்சி வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது இயக்கச்சியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டு பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் உடுத்துறை வடக்கு தாளையாடியை சேர்ந்த ஞானசீலன் தவமலர் வயது 60 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரின் சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply