நாட்டில் சவர்க்காரத்தின் விலை சடுதியாக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சலவை சவர்க்காரம் 100 ரூபாயாகவும், 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளுக்கான சவர்க்காரம் 175 ரூபாயாகவும் அதிகரித்திருக்கின்றது.
ஏனைய சவர்க்காரங்கள் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்நிலையில், சில சிறப்பு அங்காடிகளில் சவர்க்காரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Follow on social media