இரண்டு பெண்களுடன் விடுதிக்கு சென்ற நபர் குளியலறையில் சடலமாக மீட்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இரண்டு பெண்கள் மற்றும் ஒரு நண்பருடன் விடுதியொன்றிற்கு வந்த ஒரு நபரின் உடல் இரண்டு நாட்களுக்குப் பிறகு குளியலறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்டி, ஹந்தனாவில் இந்த சம்பவம் நடந்தது.

குளியலறையில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக கண்டி, ஹந்தானாவில் உள்ள ஒரு விடுதியின் மேலாளர் அளித்த புகாரைத் தொடர்ந்து கண்டி பொலிசார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி மதியம் விடுதி பணியாளர் குளியலறையில் ஒரு சடலத்தைக் கண்டு, மேலாளருக்கு அறிவித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ​​இறந்தவரின் உடலுக்கு அருகில் பல இரத்தக் கறைகளை பொலிசார் கண்டுபிடித்தனர். அவரது சடலம் இருந்த இடத்திற்கு மேலே ஒரு ஜன்னலில் துணி துண்டு கட்டப்பட்டு காணப்பட்டது.

இறந்தவர் 31 ஆம் திகதி இரவு மற்றொரு ஆண் மற்றும் இரண்டு பெண்களுடன் விடுதிக்கு வந்திருந்தார்.

இரண்டாவது நாள் காலையில் மற்ற நபர்கள் விடுதியிலிருந்து வெளியேறியதாக தெரிய வந்துள்ளது. இறந்தவர் ஹட்டன் டிக்கோயாவில் வசிக்கும் 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவரது மரணத்திற்கான காரணம் மற்றும் அவருடன் விடுதிக்குச் சென்ற மற்ற நபர்கள் குறித்து கண்டி பொலிசார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply