வயல்வெளியில் பெண்ணின் சடலம் – சந்தேகநபர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் வயல்வெளியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவின் உதவியுடன் அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் வயல்வெளியில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் நேற்று முன்தினம் (11) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய திருமணமான பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting