இன்றைய வானிலை – மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாடு முழுவதும்தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் – அடிக்கடி மழைபெய்யும்.

மட்டக்களப்பு – அடிக்கடி மழைபெய்யும்.

கொழும்பு – அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்.

காலி – அவ்வப்போது மழைபெய்யும்.

யாழ்ப்பாணம் – அவ்வப்போது மழைபெய்யும்.

கண்டி – அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்.

நுவரெலியா – அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்.

இரத்தினபுரி – அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்.

திருகோணமலை – அடிக்கடி மழைபெய்யும்.

மன்னார் – அவ்வப்போது மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யும்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply