பேக்கரி பொருட்களின் விலை குறித்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு இன்று (12) அளித்துள்ள செவ்வியொன்றின்பேதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உற்பத்திச் செலவில் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம் சேர்க்கப்பட்டாலும், தற்போது பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என்றும், அத்தகைய விலைகளை அதிகரிக்க வேண்டாம் என்று பேக்கரி உரிமையாளர்களிடம் அவர் கேட்டுக்கொள்கிறார் என்றும் ஜெயவர்தன தெரிவித்தார்.

பேக்கரி உற்பத்தியாளர்கள் இதுபோன்ற நேரங்களில் பொதுமக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக மற்ற பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிப்பதாகவும், ரொட்டியின் விலை அதிகரித்தால், விலை அதிகரிக்கப்பட்டதாகக் கருதப்படுவதால் ரொட்டியின் விலை தற்போதைய விலையிலேயே இருக்கும் என்றும் நுகர்வோர் கூறுகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting