இந்திய எண்ணெய் கப்பல் மீது திடீர் ட்ரோன் தாக்குதல் – விரைந்த போர்க்கப்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சவுதியில் இருந்து மங்களூர் நோக்கி வந்த இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடந்துள்ளது.

கச்சா எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பலில் தீ பிடித்துள்ளது.

கப்பலில் பற்றிய தீ அணைக்கப்பட்ட போதிலும் கப்பலின் இயக்கம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கப்பலில் இருப்பவர்களை மீட்க கடலோர காவல் படையின் விக்ரம் கப்பல் விரைந்துள்ளது.

கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

எம்.வி.செம் புளூட்டோ கச்சா எண்ணெய் கப்பலை நோக்கி போர்க்கப்பலும் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply