பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 7 பேர் பலி, 51 பேர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நானுஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பஸ்ஸில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட 51 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் வேனில் பயணித்த 6 பேரும், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த பஸ் பள்ளத்தில் வீழ்ந்திருப்பதால், மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting