வட மாகாண சட்டத்தரணிகள் இன்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடமாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்கள் முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்திலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Follow on social media