மலையகத்தை புரட்டிப்போட்ட வெள்ளம் – பாதிப்பு அதிகரிக்கலாம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கண்டி – அக்குறணை A- 9 வீதி வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. வாகனங்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், வீடுகள், வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

இதேவேளை அக்குறணை – தனுவில பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் சகோதரனும், சகோதரியும் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மேலும் கண்டி ரயில் நிலையம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் ரயில் சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை மலையகத்தின் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதுடன்,

கனமழை பெய்துவருவதால் தொடர்ந்தும் பாதிப்பு அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting