மட்டக்களப்பில் புகைரதம் மோதி இளைஞன் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

புகைரதம் வருவதை அவதானிக்காமல் தண்டவாளத்தின் அருகில் நின்ற இளைஞர் ஒருவர் புகைரதத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அண்மையில் நேற்று (ஜன 10) இரவு 10.40 மணியளவில் மேற்படி விபத்து சம்பவம் இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து பி.ப.03.05 மணிக்கு மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் தண்டவாளத்தின் அருகே நின்ற 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர்

புகையிரதத்தில் மோதுண்டதால் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.இந்நிலையில் புகையிரதத்தில் பயணித்தவர்களின் துரித செயற்பாட்டினால் வைத்தியசாலையில் குறித்த இளைஞனர். அனுமதிக்கப்பட்டார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting