பழிவாங்கும் பாணியில், வடகொரிய தலைவர் தனது கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்:
இந்த போரில் ஈரான் தனியாக இல்லை. நாங்கள் அவர்களுக்கு அனைத்து வகையான ஆதரவும், உதவியும் வழங்க தயார்!”
இஸ்ரேல் என்றால் ஏதாவது நாடு அல்ல. அது மத்திய கிழக்கு பகுதியிலுள்ள வெறும் அமெரிக்க ராணுவத் தளம் மட்டுமே. அதன் அனைத்து நடவடிக்கைகளும் வாஷிங்டனின் கட்டளைகளுக்கே உட்பட்டவை.”
அமெரிக்கா என்பது குற்றங்களுக்கு வழிவகுக்கும் ஒரு குற்ற நாடாகும். உலகின் மிகப் பெரிய அணுஆயுத களஞ்சியத்தை வைத்திருப்பது மட்டுமின்றி, அணுகுண்டுகளை முதன்முறையாக பயன்படுத்திய நாடும் அமெரிக்காதான்.”
எந்த நாடும் இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரானை தாக்கும் முயற்சி செய்தால், அதுவே எங்களுக்கெதிரான போர் அறிவிப்பாக கருதப்படும். அப்படி என்றால் நாங்கள் நேரடியாக போர் களத்தில் இறங்கி, இஸ்ரேலை எங்கள் முழு படை வலிமையுடன் தாக்குவோம்!”
இந்த அறிக்கை உலகளாவிய மாறுபாடுகளை ஏற்படுத்தும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவின் இந்த கடுமையான நிலைப்பாடு, தற்போது நீடிக்கும் மத்திய கிழக்கு சமரசத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்குவதாகவும் கருதப்படுகின்றது
Follow on social media