கத்திக் குத்துக்கு இலக்கான 14 வயது சிறுமி வைத்தியசாலையில் – தந்தை கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மாத்தளை பிரதேசத்தில் தனது 14 வயது மகளை கத்தியால் குத்தி காயப்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

கத்திக்குத்துக்குள்ளானவர் மாத்தளை – பலாபத்வல பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஆவார்.

சிறுமியின் கைகள், காது மற்றும் நெற்றி பகுதி என்பன கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சிறுமி மாத்தளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொரிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting