முல்லைத்தீவில் 4 வயதுச் சிறுவன் நிமோனியாவால் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேத்தில் வசித்துவரும் நிர்மலன் கபீஸ் என்ற நான்கு வயதுச் சிறுவன் நிமோனியா காச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று 13.04.23 உயிரிழந்துள்ளார்.

நேற்று 12.04.23 இரவு சிறுவனுக்கு சளி, காச்சல் பீடிக்கப்பட்ட நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு இன்று அதிகாலை 2.00 மணியளவில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த சிறுவனின் பிரோத பரிசோதனைகள் இன்று முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்தியா அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சிறுவன் நிமோனியா காச்சல் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. சிறுவனின் உடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting