கட்டுகஸ்தோட்டையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் ஒருவரும் அவரது மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்தில் 14 மற்றும் 47 வயதான பொல்கொல்ல பிரதேசத்த்தை சேர்ந்த தந்தையும் மகளுமே உயிரிழந்துள்ளனர்.
நவயலத்தன்ன – ஜம்புகஹபிட்டிய வீதியில் நவயலத்தன்ன நோக்கிச் சென்ற வேன் மோதியதில் இருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
படுகாயமடைந்த நிலையில் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் தற்போது கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வேனின் சாரதி கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Follow on social media