6 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த பயிற்றுவிப்பாளர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

விளையாட்டு பயிற்றுவிப்பாளரால் 6 சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளது.

குறித்த சம்பவம் அனுராதபுரம் – ஹெக்கிராவ பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த பாடசாலையில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுபவர் 14 மற்றும் 16 வயதான 6 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

என ஹெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை முறையிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பயிற்றுவிப்பாளரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting