காணி தகராறு – தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நில தகராறு காரணமாக அண்ணன் – தம்பி இடையில் மதுபோதையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் அண்ணனின் கத்திக் குத்துக்கு இலக்கான தம்பி உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு அக்குரஸ்ஸ மாதொல பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.

நேற்று இரவு குறித்த நபர் தனது மனைவியுடன் பெற்றோர் தங்கியிருந்த வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது மூத்த சகோதரர் மேலும் 3 பேருடன் அந்த வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்தார்.

அங்கு இருவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறி சென்றதையடுத்து மூத்த சகோதரர் கூரிய ஆயுதத்தால் அந்த நபரை தாக்கியுள்ளார்.

படுகாயமடைந்த நபர் ஆதபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன்,

அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting