யாழில் தாயின் 2வது கணவனால் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.கோப்பாய் பகுதியில் தாயின் 2வது கணவரால் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் , இரண்டாம் தாரமாக திருமணம் செய்துள்ளார்.

தனது முதல் தாரத்தின் மூன்று பிள்ளைகளுடன் , இரண்டாம் தாரத்துடன் குடும்பம் நடாத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், தாயின் இரண்டாவது கணவர் , சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து,

பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting