இரண்டு பாம்புகளை தன் தோள்களில் வைத்து நடனம் ஆடிய இளைஞர் (வீடியோ)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

உலகிலேயே மிகவும் பெரிதான பாம்பாகக் கருதப்படும் பைத்தான் வகை பாம்புகள் விஷத்தன்மை இல்லாதது. மேலும் 20 அடிகளுக்கு மேலாக வளரக்கூடியது. எனினும் தன் எடையைக் காட்டிலும் மிகப்பெரிய எடை உடைய உயிரினங்களை உண்ணக்கூடிய திறன் கொண்டவை.

மேலும், சில நேரங்களில் இந்த வகை பாம்புகள் மனிதர்களையும் விழுங்குவதுண்டு. இந்நிலையில், இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு இளைஞர் 20 அடிக்கும் அதிகமான நீளமுடைய இரண்டு பாம்புகளை தன் தோள்களில் வைத்துக்கொண்டு நடனமாடியிருக்கிறார்.

அதிக கவனத்தோடு நிதானமாக நடனமாடியிருக்கிறார். அந்த இளைஞரின் வீடியோவானது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply