நாடு முழுவதும் மக்கள் போராட்டம் – பிரதான வீதிகள் முடங்கின

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம், வரிசையில் காத்திருக்கும் நிலை ஆகியவற்றை கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை தொடக்கம் மக்கள் பாரிய முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஹிங்குராங்கொடை, பத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, ரயில் மார்க்கத்தை மறித்து ரம்புக்கனை நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கையினால் குறித்த பகுதியூடான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரம்புக்கனை – மாவனெல்ல, ரம்புக்கனை – கேகாலை, ரம்புக்கனை – குருணாகல் வீதிகளை மறித்தும் ரம்புக்கனை நகரில் தற்போது ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே, ரம்புக்கனை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.

அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியையும் மறித்து மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, அனுராதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் கண்டி – மஹியங்களை பிரதான வீதி தெல்தெனிய நகரில் மறிக்கப்பட்டுள்ளது

இதேவேளை காலி பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள சுற்றுவட்டம் அருகே பஸ்கள் நிறுத்தப்பட்டு வீதி மறிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை நகரிலும் வீதி மறிக்கப்பட்டு மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.