உலக வங்கியால் இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர், இலங்கைக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர் விஜயத்தை இன்று (22) முடித்தார்.

தமது இரண்டு நாள் விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிற அரசாங்க அதிகாரிகள், தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் அபிவிருத்தி பங்காளிகளைச் சந்தித்து இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து கலந்துரையாடினார்.

ரைசரின் வருகையின் போது கவனம் செலுத்தப்பட்ட முக்கிய துறைகளில் வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மேம்பாடு மற்றும் கிளீன் சிறிலங்கா முன்முயற்சிக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு ஆகியவை அடங்கும்.

அடுத்த மூன்று மாதங்களில் 200 மில்லியன் டொலர் மதிப்புள்ள மூன்று பெரிய திட்டங்களுக்கு நிதியளிக்கத் திட்டமிட்டுள்ள உலக வங்கி, இந்த துறைகளுக்கு தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டங்கள் கிராமப்புற அபிவிருத்தி மற்றும் கல்வியை ஆதரிப்பதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தனியார் முதலீட்டை ஈர்க்கும் வசதியை நிறுவும்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting