வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
இந்த அறிக்கை இன்று (18) பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாளை (19) வரை செல்லுபடியாகும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் “அவதானம்” செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow on social media