நோயாளர் காவு வண்டி மோதி 5 வயதுச் சிறுமி உட்பட இருவர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சுவசெரிய நோயாளர் காவு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் முன்னாள் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் ஐந்து வயதுச் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

நவகத்தகம – கிரிமெடியாவ பிரதேசத்தில் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த 74 வயதுடைய முன்னாள் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் ஐந்து வயதுடைய உறவினர் ஒருவரின் மகளும் விபத்தில் சிக்கியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் நவகத்தேகமவில் இருந்து கல்கமுவ நோக்கி சென்று மீண்டும் நவகத்தேகம நோக்கி மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட போது, ​​ஆனமடுவவிலிருந்து கல்கமுவ நோக்கி பயணித்த சுவசெரிய நோயாளர் காவு வண்டியுடன் வாகனம் மீது மோதியுள்ளது.

அந்த நோயாளர் காவு வண்டியில் நோயாளி ஒருவர் இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவரை கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுவசெரிய நோயாளர் காவு வண்டியின் சாரதியும் விபத்தில் காயமடைந்து கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன் ஐந்து வயதுடைய மகளும் கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply