110 கோடி ரூபாய் போதைப் பொருலுடன் இருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்ற இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

இதன்போது குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம் 35 கிலோ ஐஸ் என்ற மெத்தபெட்டமைன் மற்றும் 50 கிலோ கஞ்சா எண்ணெய் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வருவாய் புலனாய்வு துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் பரமக்குடி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போதே இந்தப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Follow on social media
CALL NOW

Leave a Reply