நாட்டின் பல பகுதிகளில் இன்று (03) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Follow on social media