சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 4 பேர் பலி – 14 பேர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கமும், அடுத்த 15 நிமிடங்களில் 4.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தேசிய அவசர நிலை 3 ஐ பிரகடனம் செய்த அவசர மேலாண்மை அமைச்சகம், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தால், இதுவரை 4 பேர் பலியாகியுள்ளதாகவும், 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, சிச்சுவான் மாகாணத்தில் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 90,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply