யாழில் ஸ்பெயின் நாட்டு பெண் மீது பாலியல் துன்புறுத்தல் – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.காரைநகர் – கசூரினா கடற்கரைக்க சென்றிருந்த ஸ்பெயின் நாட்டு பெண் ஒருவர் மீது பாலியல் துன்புறுத்தல் புரிந்த குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார்.

அங்கு போதையில் நின்ற குழுவினர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். அதுதொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்துக்கு சென்ற பொலிஸார் போதையில் நின்ற 10 பேரை கைது செய்தனர்.

அவர்கள் தற்போது விசாரணைக்கு உள்படுத்தபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசு கவலையை வெளியிட்டுள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக கண்டனம் வெளியிட்டுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply