ஹிந்தி சீரியல் நடிகை வைஷாலி டக்கர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கும் செய்தி ரசிகர்களை அதிர வைத்து இருக்கிறது.
வைஷாலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசுக்கு புகார் வந்ததும் அவர்கள் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தை வைத்து தற்கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வைஷாலியின் முன்னாள் காதலர் தொடர்ந்து அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்திருக்கிறது.
இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தான் வைஷாலிக்கு அபிநந்தன் என்ற கென்யாவைச் சேர்ந்த வைத்தியருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஆனால் அதற்கு பின் திருமணத்தை வைஷாலி நிறுத்தி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு கூட வைஷாலி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது அவர் திடீரென தற்கொலை செய்தது ஏன் என ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கிறார்கள்.
Follow on social media