பொலிஸார் பொதுமக்கள் மோதல் – 8 பொலிஸ் அதிகாரிகள் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் 8 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களும் 2 பொதுமக்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 6 பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் வீரகெட்டிய – அத்தனயாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் இரு காதுகளையும் பொதுமக்கள் கடித்துக் குதறியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (6) மாலை இடம்பெற்றுள்ளது. மோதலின்போது காதுகள் கடிக்கப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மோதலில் 08 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பொதுமக்களும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் 06 பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வீரகெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோனதெனிய பிரதேசத்தில் கசிப்பு காய்ச்சுவதான தகவலையடுத்து அத்தனயால பிரதேசத்தில் வீதியில் தங்கியிருந்த பலரை வீரகட்டிய பொலிஸ் அதிகாரிகள் குழு சோதனையிட்டுள்ளது.

இதன்போது இரு இளைஞர்களுக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது பின்னர் அது மோதலாக மாறியுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting