வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நயன்தாரா விக்னேஷ் சிவன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான கடந்த 8 ஆண்டுகளாக வலம் வந்துக்கொண்டிருப்பவர்கள் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி. நானும் ரவுடி தான் படத்தில் இருந்து ருவரும் காதலித்து வந்தனர். இதனிடையே அடிக்கடி வெளிநாடு பறப்பது, கோவில் செல்வது , அவுட்டிங், டேட்டிங் என பிசியாக இருந்து வந்தனர்.

இந்த ஜோடி ஒருவழியாக இந்த ஆண்டு கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர். திருமணம் ஆகி 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பத்தை இரட்டை ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.

குழந்தையுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை விக்னேஷ் சிவன் வெளியிட்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார். இது எப்படி சாத்தியம்? என குழம்பிக்கொண்டிருந்த ரசிகர்கள் பின்னர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

ஆம், இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று பெற்றோர்களாகியுள்ளனர். ஆணின் விந்தணுவை அவரின் மனைவி கருமுட்டையுடன் சேர்த்து அதை மற்றொரு பெண்ணின் கருப்பையில் செலுத்தி குழந்தை பெற்றெடுக்கும் இந்த முறையை கடைபிடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply