ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ எடையுள்ள கேரளக் கஞ்சா நெறயதினம் (24.01.2023) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறை பொலிஸாரால் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா பொதிகள் நாளையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow on social media