வவுனியாவில் மினி சூறாவளி – இயல்பு நிலை பாதிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வவுனியாவில மினிசூறாவளியுடன் கூடிய மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளது.

வவுனியாவில் கடந்த சில தினங்களாக மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. நேற்று (24.03) மாலை மினிசூறாவளியுடன்கூடிய கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளது.

குறிப்பாக காற்றின் வேகம் அதிகரித்தமையால் நகரின் முக்கிய வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்தது. இதனால் வீதிகளுடனான போக்குவரத்தும் சில மணிநேரம் தடைபட்டது. மாவட்ட செயலகம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, வைத்தியசாலை, நீதிமன்றத் தொகுதி, கந்தசாமி கோவிலடி, பூந்தோட்டம், மகாறம்பைக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது.

இதேவேளை பல இடங்களில் மரக்கிளைகள் வீடுகளுக்கு மேல் முறிந்து வீழ்ந்ததில் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் மதில்களும் சரிந்து வீழ்ந்துள்ளது.

IMG 4175
b231d190 4e2a 4412 92fd 856dfa6e0025
ecae033e 793c 495a 9e8b b93f26715326
IMG 4147
IMG 4151
IMG 4153
IMG 4166
IMG 4170
IMG 4171
IMG 4174
Follow on social media
CALL NOW

Leave a Reply