யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த மாணவி தேசிய மக்கள் சக்தியின் முழுநேர உறுப்பினர் என கூறப்படுகின்றது.
அதோடு கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி(NPP) சார்பாக போட்டியிட்ட யுவதியே தனது உயிரை மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் , தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இவர் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் காணப்பட்டதாகவும் இந்நிலையில் நேற்று முன்தினம் (10) தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளதாகவும் மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Follow on social media