முல்லைத்தீவில் சிறுமி துஷ்பிரயோகம் – காதலன் தலைமறைவு – ஒருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் 15 அகவை சிறுமி ஒருவர் இரு ஆண்களுடன் உறவினை வைத்திருந்தமை தெரியவந்ததை தொடர்ந்து சிறுமியுடன் உறவு வைத்திருந்த முள்ளியவளை பகுதியினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவரை முள்ளியவளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதறிகுடா பகுதியை சேர்ந்த 15 அகவை சிறுமி வைத்திய சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்குச் சென்ற வேளை, மாவட்ட சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனையில் இந்தச் சிறுமி ஆண்களுடன் உறவு கொண்டமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமியின் காதலன் ஒருவரும், முள்ளியவளை பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவரும் சிறுமியுடன் உறவில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த முறைப்பாட்டினை ஏற்று நடவடிக்கையினை மேற்கொண்ட முள்ளியவளை பொலிசார் சிறுமியுடன் உறவை வைத்த காதலனை தேடி வலைவிரித்துள்ளதுடன் உறவு வைத்த குடும்பஸ்தரை கைது செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting