விருந்தினர் விடுதிக்குள் சரமாரி துப்பாக்கி சூடு – இருவர் பலி, இருவர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

விருந்தினர் விடுதிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியனதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் அம்பலாங்கொட – தெல்துவ பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று மாலை இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 33 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது விருந்தகத்தின் மேல்மாடியில் 4 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீ-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தியே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த, கஹவ பிரதேசத்தைச் சேர்ந்த

30 மற்றும் 35 வயதான இருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அம்பலாங்கொடையில் ஒரு மாதத்திற்குள் இடம்பெற்ற மூன்றாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மூவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துக்கான காரணத்தை கண்டறியவும், சந்தேக நபர்களை கைது செய்யவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow on social media
CALL NOW

Leave a Reply