மகளிடம் தொந்தரவு – மாமனார் தாக்கி மருமகன் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோலஹேன பிரதேசத்தில் மாமனார் தாக்கியதில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (2) இரவு தனது மகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறி பாதிக்கப்பட்டவரின் மாமனார் அவரை கட்டையால் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் 57 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று 4ஆம் திகதி வெலிசர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Follow on social media
CALL NOW

Leave a Reply