உக்ரைன் படைவீரர்களுக்கு போர் பயிற்சி வழங்கும் கனடா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

உக்ரைன் படைவீரர்களுக்கு பயிற்சிகளை வழங்க உள்ளதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.

உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த இராணுவப் பயிற்சிகளை ரஷ்யா படையெடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கனடா இடை நிறுத்தியிருந்தது.

M 777 ரக ஆட்டிலறி ஆயுதங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை கனேடிய படையினர் வழங்க உள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டில் முதன் முறையாக கனடா, உக்ரைனுக்கு இராணுவ பயிற்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த இராணுவ பயிற்சி வழங்கிய கனேடிய உயர் அதிகாரிகளுக்கு ரஷ்யா தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply