மது போதையில் பொலிஸார் மீது தாக்குதல் முயற்சி – பொலிஸார் துப்பாக்கி சூடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மதுபோதையில் இருந்த சிலர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் – பொதுமக்கள் இடையில் ஏற்பட்டிருந்த மோதல் சம்பவத்தில் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் காலி – பலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடக பிரிவு தொிவித்திருக்கின்றது.

பொதுமக்களில் குடிபோதையில் இருந்த சிலர் பொலிஸாரைத் தாக்க முயற்சித்தபோதே இந்த மோதல் சம்பவம் நடைபெற்றதாகவும்,

அதன்போது இரண்டு பொலிஸார் காயமுற்றுள்ளதாகவும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே ​நேரம் பொதுமக்களை கலைந்து போகச் செய்யும் வகையில் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் ​மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply