மதுபோதையில் இருந்த சிலர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் – பொதுமக்கள் இடையில் ஏற்பட்டிருந்த மோதல் சம்பவத்தில் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் காலி – பலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடக பிரிவு தொிவித்திருக்கின்றது.
பொதுமக்களில் குடிபோதையில் இருந்த சிலர் பொலிஸாரைத் தாக்க முயற்சித்தபோதே இந்த மோதல் சம்பவம் நடைபெற்றதாகவும்,
அதன்போது இரண்டு பொலிஸார் காயமுற்றுள்ளதாகவும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் பொதுமக்களை கலைந்து போகச் செய்யும் வகையில் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Follow on social media