தண்டவாளத்தில் தலையை வைத்து 18 வயது யுவதி உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் தண்டவாளத்தில் தலையை வைத்து 18 வயது யுவதி ஒருவர் உயிர்மாய்த்துள்ளார்.

இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் புத்தளம் கறிகட்டை பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவருகிறது.

மேற்படி யுவதி புகையிரதம் வருவதை அவதானித்து விட்டு தனது கைப்பையை எறிந்து விட்டு தண்டவாளத்தில் தலையை வைத்து கொண்டதாக அவதானித்தவர்கள் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply