மாணவி மீது ஆசிட் வீச்சு – ஆபத்தான நிலையில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இந்தியாவின் டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டதில் மாணவி ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் மீது ஆசிட்டை வீசி இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர். இதில் மாண்வியின் முகம், கண்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து அந்த மாணவி சப்தர்ஜங் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் மாணவி மீது ஆசிட் வீசுவது வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

ஆசிட் வீச்சுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் காணொளி ஆதாரத்தை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பட்டப்பகலில் பள்ளிமாண்வி மீது அசிட் வீசப்பட்ட சமப்வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply