20 ரூபாயால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்ட பாடசாலை மாணவன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

களுத்துறையிலுள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரக் கல்வியை கற்பதற்காக புதிதாக இணைந்த மாணவர் ஒருவரை அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் தாக்கியதில் பலத்த காயமடைந்த நிலையில் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதலுக்கு இலக்கான மாணவனிடம் தாக்குதலை நடத்திய மாணவர்கள் 20 ரூபா பணம் கேட்டதாகவும் அதனை வழங்காமையினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் மாணவனின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

குறித்த தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரால் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சந்தேகத்தின் பேரில் மூவரைக் கைது செய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply